வடக்கு- கிழக்கில் உள்ள வன நிலங்கள் பயிர்ச்செய்கைக்காக கொடுக்கப்பட்டுள்ளன!

Date:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வன திணைக்களத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களை மீண்டும் விவசாய மக்களுக்கு வழங்க விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வன திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வயல் நிலங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் கமநல ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

வனப்பாதுகாப்பிற்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை இம்முறை மற்றும் எதிர்வரும் பருவ காலத்தில் விவசாயம் செய்யக்கூடிய வகையில் விவசாயிகளுக்கு வழங்குவதை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர கமநல அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவிற்கு உதவிகளை ஏற்றிச் செல்லும் குளோபல் சுமுத் புளோட்டிலாவை கண்காணிக்கும் துருக்கி ட்ரோன்கள்

இஸ்ரேலின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், காசாவிற்கு உதவிகளை ஏற்றிச் செல்லும் குளோபல் சுமுத்...

காசா போர் முடிவுக்கு வருமா? இன்று டிரம்ப் – நெதன்யாகு சந்திப்பு!

இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி...

இலஞ்சம் வாங்கிய முன்னாள் சீன அமைச்சருக்கு மரணதண்டனை

சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த சில காலமாகவே லஞ்சம்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் நாட்டில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...