வீட்டுத்தோட்டம் அமைப்பதற்காக அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை!

Date:

அடுத்த வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அரச உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாளை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கான காரணங்கள் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கருத்து வெளியிட்டார்.

அடுத்த வாரத்தில் இந்து இதனை நடைமுறைப்படுத்த கலந்துரையாடல்கள் நட்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வீடுகளில் அவர்கள் உபயோகமுள்ள முறையில் பயிர்செய்கையை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த விடுமுறையை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் உரப் பிரச்சினை தொடர்பாகவும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், உரப்பிரச்சினை இன்று நாட்டில் நிலவுகின்றது.

எனினும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...