இன்று முதல் யாழ்ப்பாணம் – கொழும்பு விசேட அதிவேக ரயில் சேவை!

Date:

ஜூன் 15ஆம் திகதி முதல் விசேட பயணிகள் போக்குவரத்துத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் பின்னர், இன்று கல்கிசையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான நகரங்களுக்கு இடையிலான சொகுசு விரைவு ரயில் சேவையை ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வை அடுத்து அண்மைக்காலமாக போக்குவரத்து செலவுகள் மற்றும் பஸ் கட்டணங்கள் அதிகரித்துள்ளமையினால் இந்த போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் இன்று முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கல்கிசையில் இருந்து யாழ்ப்பாணம் வரை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

கல்கிசையில் இருந்து இரவு 10:00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.

இதே ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10:00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை (20) அதிகாலை 5:30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

ரயில்வே துறையின் தகவலின்படி, இந்த ரயிலில் 10 முதல் வகுப்பு பெட்டிகள் உட்பட குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் 520 இருக்கைகள் உள்ளன.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...