இன்று முதல் யாழ்ப்பாணம் – கொழும்பு விசேட அதிவேக ரயில் சேவை!

Date:

ஜூன் 15ஆம் திகதி முதல் விசேட பயணிகள் போக்குவரத்துத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் பின்னர், இன்று கல்கிசையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான நகரங்களுக்கு இடையிலான சொகுசு விரைவு ரயில் சேவையை ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வை அடுத்து அண்மைக்காலமாக போக்குவரத்து செலவுகள் மற்றும் பஸ் கட்டணங்கள் அதிகரித்துள்ளமையினால் இந்த போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் இன்று முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கல்கிசையில் இருந்து யாழ்ப்பாணம் வரை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

கல்கிசையில் இருந்து இரவு 10:00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.

இதே ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10:00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை (20) அதிகாலை 5:30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

ரயில்வே துறையின் தகவலின்படி, இந்த ரயிலில் 10 முதல் வகுப்பு பெட்டிகள் உட்பட குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் 520 இருக்கைகள் உள்ளன.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...