எரிபொருள் விலை அதிகரிப்பு: தம்புள்ளை பொருளாதார வர்த்தகம் பாதிப்பு!

Date:

எரிபொருள் விலை மேலும் அதிகரிப்பால் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (26), ஏற்கனவே, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறி விநியோகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

நாட்டில் பாரிய தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில், திடீரென எரிபொருள் விலையேற்றத்தினால் பொருளாதார மையம் மட்டுமன்றி மரக்கறிச் செய்கைகளும் செயலிழந்து போகும் அபாயம் அதிகம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் மரக்கறிகள் கொண்டு வரப்படுவதுடன், அவற்றை கொள்வனவு செய்ய நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வர்த்தகர்கள் வருகை தருகின்றனர்.

ஆனால், எரிபொருள் விலையேற்றத்தால் வியாபாரம் நிலைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...