எரிபொருள் விலை அதிகரிப்பு: தம்புள்ளை பொருளாதார வர்த்தகம் பாதிப்பு!

Date:

எரிபொருள் விலை மேலும் அதிகரிப்பால் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (26), ஏற்கனவே, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறி விநியோகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

நாட்டில் பாரிய தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில், திடீரென எரிபொருள் விலையேற்றத்தினால் பொருளாதார மையம் மட்டுமன்றி மரக்கறிச் செய்கைகளும் செயலிழந்து போகும் அபாயம் அதிகம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் மரக்கறிகள் கொண்டு வரப்படுவதுடன், அவற்றை கொள்வனவு செய்ய நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வர்த்தகர்கள் வருகை தருகின்றனர்.

ஆனால், எரிபொருள் விலையேற்றத்தால் வியாபாரம் நிலைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...