எரிபொருள் தொடர்பில் கலந்துரையாட காஞ்சன – நசீர் கட்டார் பயணம்!

Date:

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் கட்டார் நாட்டுக்கு பயணமாகவுள்ளனர்.

எரிபொருள் மற்றும் வேலை சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளன.

கட்டார் அரசிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடலுக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்கவும் ரஷ்யா செல்லவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...