சம்மாந்துறையில் குழந்தை ஒன்றைக் கடத்த முற்பட்ட சம்பவம்!

Date:

குழந்தை ஒன்றைக்கடத்த முற்பட்ட வயோதிபர் ஒருவர் சம்மாந்துறையில் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது.

4 வயதையுடைய ஆண் குழந்தையொன்று சம்மாந்துறை ஹிஜ்ரா 5ஆம் வீதியில் இயங்கும் பாலர் பாடசாலையிலிருந்து நண்பகல் ஒரு மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவ்வீதியில் நின்றிருந்த 55 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் இக்குழந்தையை வாகனம் ஒன்றில் கடத்த முற்பட்டுள்ளார். இதன்போது அக்குழந்தை கூக்குரலிட்டு அழுதுள்ளது.

இதனை அவதானித்த அவ்வீதியில் நின்றிருந்த பொது மக்கள் அக்குழந்தையை அவ்வயோதிபரிடமிருந்து காப்பாற்றியதோடு அவ்வயோதிபரை நையப்புடைத்து சம்மாந்துறைப்பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை மருந்துகள், சிறிஞ், ஊசி மற்றும் பாடசாலை மாணவர்களில் உடைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...