எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவி: ஜனாதிபதிக்கும் புடினுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

Date:

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மிகவும் ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ள ஏரோஃப்ளோட் விமானச் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி உரையாடலில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட சவால்களை வெற்றிகொள்வதற்கு ரஷ்யா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் எரிபொருள் கொள்வனவுக்கான கடன் வசதியை வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...