எரிபொருள் விநியோகம் தொடர்பாக கலந்துரையாட இரண்டு ரஷ்ய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை!

Date:

(file Photo)
இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இருவரும் பஹரேன் முதல் கல்ஃப் எயர் விமான சேவை ஜீ.எப்.- 144ரக விமானத்தில்  இன்று காலை 9.00 மணியளவில்  வந்தடைந்ததாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான சர்வதேச நேரடி விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இந்த பிரதிநிதிகள் பஹ்ரைன் ஊடாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தனர்.

இந்த இரு அதிகாரிகளை வரவேற்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறைக்கு வந்திருந்தனர்.

கோட்டாபய ராஜபக்ச, தொலைபேசி உரையாடலில், எரிபொருள் இறக்குமதியை எளிதாக்குவதற்கான கடன் உதவியை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தனிப்பட்ட முறையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...