எரிபொருள் விநியோகம் தொடர்பாக கலந்துரையாட இரண்டு ரஷ்ய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை!

Date:

(file Photo)
இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இருவரும் பஹரேன் முதல் கல்ஃப் எயர் விமான சேவை ஜீ.எப்.- 144ரக விமானத்தில்  இன்று காலை 9.00 மணியளவில்  வந்தடைந்ததாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான சர்வதேச நேரடி விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இந்த பிரதிநிதிகள் பஹ்ரைன் ஊடாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தனர்.

இந்த இரு அதிகாரிகளை வரவேற்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறைக்கு வந்திருந்தனர்.

கோட்டாபய ராஜபக்ச, தொலைபேசி உரையாடலில், எரிபொருள் இறக்குமதியை எளிதாக்குவதற்கான கடன் உதவியை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தனிப்பட்ட முறையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...