இன்று முதல் கொழும்பிற்கு எரிவாயு விநியோகம்: இன்று நாட்டுக்கு மற்றுமொரு எரிவாயு கப்பல்!

Date:

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகம் ஜூலை 11 திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது. புதிய விலை இப்போது 4910ரூபாவாகும்.

மேலும், மற்ற பகுதிகளுக்கு ஜூலை 13ஆம் திகதி எரிவாயு விநியோகம் செய்யப்படும்.

இதேவேளை பொதுமக்கள் சிலிண்டர்களை பதுக்கி வைப்பதில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் லிட்ரோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை மே மாதத்திற்கான மின்சார கட்டண பத்திரத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

3,700 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நேற்று  வந்தடைந்தது. அதன்படி நேற்று பிற்பகல் முதல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...