ஊடகவியலாளர்களை தாக்கிய விசேட அதிரடிப்படையின் அதிகாரி பணி இடைநீக்கம்!

Date:

தனியார் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படையின் எஸ்.எஸ்.பி அதிகாரி ரொமேஷ் லியனகே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று பொலிஸ் தலைமையகத்தின் ஊடக அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை தெரிவிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே உடனடியாக பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு நிறுவன சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாகவும், பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பணியிடம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

சிறப்பு அதிரடிப் படையின் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றினார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...