விமானப்படை தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி தங்கியிருப்பதாக கூறும் செய்திகளில் உண்மையில்லை!

Date:

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை இலங்கை விமானப்படை மறுத்துள்ளது.

அதற்கமைய இந்த விடயம் தொடர்பில், முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் தர்மபால சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்தி பொய்யானது என விமானப்படை ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் முன்னாள் அஜித் தர்மபாலவின் வெளிப்படுத்தல் விமானப்படைக்கும் விமானப்படைத் தளபதிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியாகும் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இது பொதுமக்களின் கோபத்தை இலங்கை விமானப்படை மீது திருப்பும் முயற்சி என்றும் விமானப்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...