ஜனாதிபதியின் பயண இலக்கு செவ்வாய் கிரகமா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இராஜினாமா கடிதத்தை அனுப்பாமல் ஜனாதிபதி ஏன் நேரத்தை வீணடிக்கிறார் என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலம், உலகின் மூலை முடுக்கெல்லாம் செல்ல இப்போது நேரம் போதுமானது என்றும் அவர் கூறினார்.
இலங்கையர்கள் இருக்கும் எந்த நாட்டிற்கும் ஜனாதிபதியால் செல்ல முடியவில்லை எனவும், ஜனாதிபதி வேறு கிரகத்தை தேடிக் கொண்டிருப்பதால் தான் இராஜினாமா கடிதத்தை அனுப்ப இவ்வளவு கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார் என்பதில் நியாயமான சந்தேகம் இருப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.