இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

Date:

இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

இதில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் பங்கேற்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு மற்றும் அனைத்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்கள்.

பாராளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்கள் மற்றும் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிப்பர்.

அனைத்து மாநிலத்தின் சட்டமன்றத்திலும், டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம்.

எந்த கட்சிக்கும் வாக்காளர்களை நிர்பந்திக்க உரிமையில்லை. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அட்டவணையின்படி ஜூலை 21ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஜூலை 25ஆம் திகதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பார். அதற்கு முன்னதாக ஜூலை 24ஆம் திகதி ராம்நாத் கோவிந்த் தனது பதவியை இராஜினாமா செய்வார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...