போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய தண்ணீருக்காக இன்னும் பொலிஸார் கட்டணம் செலுத்தவில்லை!

Date:

மக்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய தண்ணீருக்காக தேசிய நீர் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை பொலிஸ் துறை இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் போது பொலிஸாரால் பாரியளவிலான தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீர் பீரங்கிகளை இயக்குவதற்கான தண்ணீரைப் பயன்படுத்தியதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு பொலிஸ் திணைக்களம் இன்னும் பணம் செலுத்தவில்லை என பொலிஸ் அதிகாரி மேலும் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, பொலிஸ் நிலையங்களில் இருந்து கொழும்புக்கு கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு வருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது பெருமளவிலான கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதால், கொழும்பு பொலிஸ் நிலையங்களில் குறைந்த எண்ணிக்கையிலான கண்ணீர் புகை குண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

‘எனவே, மற்ற பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களை தங்கள் இருப்புக்களை கொழும்புக்கு அனுப்புமாறு நாங்கள் கேட்க வேண்டியிருந்தது’ என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

Popular

More like this
Related

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உதவி

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது...

நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත්...

வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள்...

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...