இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது!

Date:

அண்மைய எரிபொருள் விலை குறைப்புக்கு அமைவாக இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 2.23 வீதத்தால் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ. 40 குறைந்து ரூ.38 ஆக இருக்கும்.

இந்த விலை அதிகரிப்பு தனியார் பஸ்கள் மற்றும் இலங்கை பஸ்களுக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண சேவைகள், அரை சொகுசு சேவைகள், சொகுசு சேவைகள் மற்றும் அதி சொகுசு சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் இந்த விலை திருத்தம் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து சபை வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் அறிவித்துள்ளதாக நிலான் மிராண்டா தெரிவித்தார்.

பேருந்துக் கட்டணக் குறைப்பு வழங்கப்படாவிட்டால் பொதுமக்கள் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். 1955 இலக்கத்திற்கு அழைப்பெடுக்கலாம். 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

அதேபோல், இந்த பஸ் கட்டண வசூலை கண்காணிக்க,  அதிகாரிகள் முடிந்தவரை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

புதிய சட்ட விதிகள்: பஸ் சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை.

பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய சட்டவிதிகள் மற்றும் பரிசோதனைகள்...

கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத...

IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22)...

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க துருக்கி இணக்கம்.

இலங்கைக்கான  துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü...