ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது: சஜித் கடும் கண்டனம்!

Date:

நிராயுதபாணியான போராட்டக்காரர்கள் மீது ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

தாக்குதலுக்கு உத்தரவிட்டது மற்றும் திட்டமிட்டது யார் என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பெண்கள், அங்கவீனமுற்ற இராணுவத்தினர் என பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனை எதிர்க்கட்சியினர் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

இத்தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தாக்குதல் தொடர்பான பொறுப்பில் இருந்து ஜனாதிபதி விலகிச் செல்ல முடியாது என்றும் அரச அனுசரணையுடன் வன்முறைக்கு உத்தரவு பிறப்பித்தது யார் எனவும் கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...