நாளை விசேட டெங்கு தடுப்பு தினமாக பிரகடனம்!

Date:

நாளை (ஜூலை 25) விசேட டெங்கு தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 43,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த மாதத்தில் மாத்திரம் 8,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதனையடுத்து, இந்த விசேட டெங்கு தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அன்றைய தினம் அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு மணிநேரம் தமது வளாகங்களை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு நிறுவனத்திலும் பொறுப்பான அதிகாரியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்பட்டு அதனைக் கண்காணித்து உள்ளூர் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆதரவைப் பெற வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...