ரயில் நிலைய அதிபர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!

Date:

நேற்று (ஜூலை 23) மாலை 6:00 மணிக்கு ரயில் நிலையங்களில்  டிக்கெட் வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகியதன் மூலம் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நிலைய அதிபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று (ஜூலை 24) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில்வே கட்டண திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படாததால் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது 48 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்படும் எனவும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின், அன்றிலிருந்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...