போர்க் குற்றங்களுக்காக கோட்டாபயவை கைது செய்யுமாறு சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்பு வேண்டுகோள்!

Date:

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யுமாறு சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் சட்டத்தரணிகள் அமைப்பு கோரியுள்ளது.

இது தொடர்பான குற்ற அறிக்கை சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது ஜெனிவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறினார் என்றும், இவை சிங்கப்பூரில் உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்ட உள்நாட்டு வழக்குகளுக்கு உட்பட்ட குற்றங்கள் என்றும் 63 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது ஜெனிவா உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டங்களை கோட்டாபய ராஜபக்ச கடுமையாக மீறியதாக சட்டப்பூர்வ புகார் வாதிடுகிறது.

இதேவேளை கொலை, மரணதண்டனை, சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற சிகிச்சை, கற்பழிப்பு மற்றும் பிற பாலியல் வன்முறைகள், சுதந்திரத்தை பறித்தல், கடுமையான உடல் மற்றும் மனநல பாதிப்பு மற்றும் பட்டினி ஆகியவை அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...