நாடாளுமன்றில் புதிய நியமனங்களை வழங்கிய பிரதமர்!

Date:

பாராளுமன்ற ஆளும் கட்சியின் பிரதி முதற்கோலாசான்கள் மற்றும் உதவி முதற்கோலாசான்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து நேற்று (27) வழங்கப்பட்டன.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சாகர காரியவசம் மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகியோர் பிரதி முதற்கோலாசான்களாகவும், கோகிலா குணவர்தன, மதுர விதானகே மற்றும் திஸகுட்டி ஆரச்சி ஆகியோர் உதவி முதற்கோலாசான்களாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து உரிய நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆளும்கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சி முதற்கோலாசானின் செயலாளரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன மற்றும் சபை முதல்வரின் செயலாளரும் பிரதமரின் மேலதிக செயலாளருமான ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...