ஜூலை மாதத்தில் மட்டும் 30 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்!

Date:

இந்த மாதத்தில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 30 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

கொவிட் இறப்புகள் அதிகரித்து வருவதால், மக்கள் சுகாதார விதி முறைகளைப் பின்பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், தடுப்பூசியைப் பெறக்கூடியவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் (பூஸ்டர்) பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இன்னும் சிலருக்கு முதல் டோஸ் கூட எடுக்கப்படவில்லை என்று மருத்துவர் கூறினார்.

குறிப்பாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்றும், காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால், சுகாதார சட்டங்களின்படி மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...