ஜூலை மாதத்தில் மட்டும் 30 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்!

Date:

இந்த மாதத்தில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 30 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

கொவிட் இறப்புகள் அதிகரித்து வருவதால், மக்கள் சுகாதார விதி முறைகளைப் பின்பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், தடுப்பூசியைப் பெறக்கூடியவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் (பூஸ்டர்) பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இன்னும் சிலருக்கு முதல் டோஸ் கூட எடுக்கப்படவில்லை என்று மருத்துவர் கூறினார்.

குறிப்பாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்றும், காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால், சுகாதார சட்டங்களின்படி மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...