இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை போர் விமானங்கள் மூலம் தாக்கப்பட்டது, இதில் இஸ்லாமிய ஜிஹாத் குழுவின் தளபதி மற்றும் ஒரு இளம் பெண் உட்பட குறைந்த பட்சம் 10 பேர் உயிர் இழந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
இஸ்லாமிய ஜிஹாத்தின் இராணுவப் பிரிவான அல்-குத்ஸ் படைப்பிரிவின் தளபதியான தைசிர் அல்-ஜபரி, காசா நகரின் மையத்தில் உள்ள பாலஸ்தீன கோபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வான்வழித் தாக்குதலில் இறந்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளது.
அல்-ஜபாரி மற்றும் ஐந்து வயது சிறுமி உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களின் விளைவாக குறைந்தது 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.