இஸ்லாமிய புதுவருடத்தில் ஆஷூரா தினம்!

Date:

முஸ்லிம்கள் கலண்டரின் படி பிறந்திருக்கின்ற 1444 வது வருடத்தின் முதல் மாதமாகியா முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் மிக முக்கியமாக கருதப்படுகின்ற ஆஷூரா தினம் நாளை திங்கள் கிழமையும் அதனை அடுத்து வருகின்ற தினமும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இத்தினங்களில் நோன்பு நோற்று தங்களுடைய பாவங்களுக்கு பரிகாரங்களை தேடிக்கொள்வதும், அல்லாஹ்வுடைய அருளைப் பெற்றுக் கொள்வதும் முஸ்லிம்களுடைய மிக முக்கியமான வணக்கமாக இருக்கின்றது.

ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அரபுமொழியில் அஷரா எனும் பத்தைக் குறிக்கும்.

இஸ்லாத்தின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தானும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். இதன் அடிப்படையில் ரமலானுக்கு அடுத்தபடியாக உள்ள ஒரு முக்கியமான நோன்பாகவும் இது கருதப்படுகின்றது.

இதனடிப்படையிலேயே ஆஷுரா தினத்தன்று முஸ்லிம்கள் நோன்பு நோற்று வருகின்றார்கள். இது இஸ்லாத்தில் கட்டாய கடமையல்ல. இதுவொரு சுன்னத்தாக (நபி நாயகத்தின் வழிமுறை) கொள்ளப்படுகின்றது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...