ஆறு மாதங்களுக்கு நாட்டை வழிநடத்த ஜனாதிபதிக்கு அனுமதி வழங்குவோம்: வஜிர கோரிக்கை

Date:

ஒரு வருடமாக காணப்படாத எரிவாயுவும்,  இரசாயன உரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தென்பட ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆறு மாதங்களுக்கு நாட்டை வழிநடத்த அனுமதிக்க வேண்டும்.

இந்த தருணத்தில் தொழிற்சங்க சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால் அது டீசல், பெற்றோல் இழப்புக்கு வழிவகுக்கும் எனவும் இளைஞர்களின் எதிர்காலம் அழிந்துவிடும் எனவும் அபேவர்தன தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களுக்கும் உரிமைகள் உள்ளன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், ஆனால் தற்போது வீழ்ந்து வங்குரோத்து நாடாக நாம் காணப்படுகின்றோம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற வேளையில் ரணிலுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் பெற்றோல், எண்ணெய், பெற்றோலிய பிரச்சனைகள் தீர்ந்து நாடு வழமைக்கு திரும்பும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...