‘காலி முகத்திடல் போராட்டம் நிறுத்தப்பட்டாலும் எனது போராட்டம் இன்னும் முடியவில்லை’: பேராயர்

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்த கொழும்பு பேராயர், தற்போதைய ஜனாதிபதி இதற்கு சாதகமாக செயற்பட்டால் தான் ஏற்றுக்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 அன்று, சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்கள் இலக்கு வைக்கப்பட்டன.

மேலும், சுதந்திரம் அடைந்ததில் இருந்து கடந்த 74 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் சட்டத்தில் தலையிடுகின்றனர் என்று கர்தினால் கூறினார்.

இலங்கையில் நீதி மோசமான நிலையில் உள்ளது. ஏனென்றால், காலங்காலமாக இலங்கை அரசியல்வாதிகள் சட்டத்தில் தலையிடுகிறார்கள்.

மேலும் காலி முகத்திடல் போராட்டம் நிறுத்தப்பட்டாலும் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சஹாரான் ஹாசிமைக் கைது செய்யத் தயாரான நிலையில், சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீது செல்வாக்கு மிக்கவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகப் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்து, அந்த அதிகாரியை கைது செய்து, தாக்குதல் நடத்தியவர்களைச் செல்ல அனுமதித்தவர்களே இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பாளிகள் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். .

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...