குழந்தையின் பசிக்கு உணவளிக்க பால் மா டப்பாவை திருடிய தந்தை கைது!

Date:

அளுத்கம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து 3,100 ரூபா பெறுமதியான குழந்தைகளுக்காக கொடுக்கப்படும் பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் 30 வயதுடைய மீனவர் தந்தை ஒருவர் அளுத்கம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது ஒரு வயது எட்டு மாத குழந்தையின் பசியை போக்க பால் பவுடர் டப்பாவை திருடியதாக அவர் அழுது கொண்டே பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த  தந்தை பல்பொருள் அங்காடிக்கு சென்று பால் பவுடர் டப்பாவை எடுத்து அவர் அணிந்திருந்த சட்டையில் மறைக்க முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து பெண் ஊழியர் ஒருவர் சம்பவத்தை பார்த்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்து சந்தேகநபரான தந்தையை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...