சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாத இறுதியில் இலங்கை வரும்:மத்திய வங்கி ஆளுநர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்படும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிககையிலே அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதாரத்திலும் சில சாதகமான முடிவுகள் காணப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துறைகளின் செயல்திறன் குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், சமீபத்திய மின்சாரக் கட்டண உயர்வைச் சேர்த்த பிறகும், மொத்தப் பணவீக்கம் 65 சதவீதத்தைத் தாண்டாது என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இதேவேளை இந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகவே இருக்கும் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு பிரிவின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஜானக எதிரிசிங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

நான்காவது அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி கொழும்பில்..!

தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நாளை 23...

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும்: பாராளுமன்றில் அமைச்சர் விஜித

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) செப்டெம்பர் முற்பகுதிக்குள் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக,...