நாவலப்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர்கொழும்பு மக்கள் நிதியுதவி!

Date:

அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பாதிப்பினால் நாவலப்பிட்டிய பிரதேசம் மிக மோசமாக பாதிப்படைந்தது யாவரும் அறிந்த விடயமே.

இந்தப் பாதிப்பின் காரணமாக அப்பகுதி வாழ் மக்கள் உடமைகளை இழந்து, உயிர்ச் சேதங்களுக்கு ஆளாகி, தம்முடைய வாழ்விடங்களை இழந்து வாழ்வாதாரங்களுக்கு கஷ்டப்படக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கான பல்வேறு மனிதாபிமான உதவிகளை அப்பகுதி வாழ் மக்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த அமைப்புக்களும், பள்ளிவாயல்களும், முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாத சமூகங்களும் உதவிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த உதவிகளின் வரிசையில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த தனவந்தர்களும், பிரஉபகாரிகளும் இணைந்து எடுத்த முயற்சியின் விளைவாக 949,204.00  ரூபாய் தொகையை அவர்கள் சேகரித்து நேற்று நாவலப்பிட்டிய பகுதிக்குச் சென்று அவர்கள் நேரில் கையளித்து இருக்கின்றார்கள்.

இத்தகைய இந்த மனிதாபிமான, சகோதரத்துவ உதவிகளை மேற்கொண்ட இந்த சகோதரர்களுக்கும், நாட்டின் ஏனைய பகுதிகளை சேர்ந்த தனவந்தர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நாம் அனைவரும் நன்றி பாராட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.

Popular

More like this
Related

விவாகரத்து மற்றும் முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பான இரண்டு தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கையின் தனிநபர் சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு...

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...