பேருவளை ஜாமிஆ நளீமிய்யா உயர் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்றாகும்!

Date:

கடந்த ஐந்து தசாப்தங்களாக இலங்கையில் மகத்தான கல்விப் பணி ஆற்றி வரும் முன்னணி கல்வி நிறுவனமான இலங்கையின் பேருவளையில் அமைந்துள்ள ஜாமிஆ நளீமிய்யா உயர் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்றாகும்.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் மிகப் பாரிய பங்களிப்புக்களை செய்து வருகின்ற பேருவளையில் ஜாமிஆ நளீமிய்யா உயர்கலாபீடம் ஆகஸ்ட் 19 இதே போன்றதொரு தினத்தில் 1973ஆம் ஆண்டு பேருவளையில் அரம்பிக்கப்பட்டது.

கொடைவள்ளல் எம்.ஐ.எம்.நளீம், அர்களுடைய முழுமையான பொருளாதார பங்களிப்பில் அரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இலங்கை மட்டுமல்லாமல் சர்வதேச மட்டத்ததிலும் புகழ்பெற்ற நிறுவனமாக இது மிளிர்ந்திருக்கின்றது.

இங்கு படித்து வெளியாகிய பட்டதாரிகள் பல்வேறு துறைசார் நிபுணர்களாக வளர்ச்சியடைந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தா சார்ந்த சமூகத்திற்காகவும் நாட்டிற்காகவும் பங்களிப்ப செய்து வருகின்றமை மிக முக்கியமான அம்சமாகும்.

விரைவுரையாளரகளாக, இராஜதந்திரிகளாக, திணைக்கள தலைவர்களாக, அதிபர் ஆசிரியர்களாக, கல்வித்துறை ஆலோசகர்கர்களாக, சட்டத்தரணிகளாக, நிபுணத்துவம் வாய்ந்த துறைசார் நிபுணர்களாக  பல்வேறு துறைகளில் பரிணாமம் பெற்று விளங்குகின்ற கல்லூரியின் வார்ப்புக்கள் இந்நாட்டுக்கு கிடைத்த வரப் பிரசாதமாகும்.

அந்நிறுவனத்தின் புதிய தலைவராக முதல்வராக அந்த நிறுவனத்திலேயே கல்வி கற்று வெளியேறி நீண்டகாலம் பணியாற்றிய அஷ்ஷேக் ஏ.சி அகார் முகம்மது சில தினங்களுக்கு முன்னால் நியமிக்கப்பட்டதும் இக்காலப்பகுதியில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த இக்கலாபீடம் தொடக்க காலம் முதலே சமகால உலகுக்கு இயைபான வகையிலான பரந்த கல்வித் திட்டமொன்றினைக் கொண்டிருந்தது.

அந்த வகையில், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மரபார்ந்த கல்விச் சட்டகத்தினுள் நவீன கல்வியை உள்ளீர்த்து முழுமையான இஸ்லாமியக் கல்வி முறையொன்றை முன்வைக்கும் வரலாற்றுத் தேவையை அது பூர்த்தி செய்தது.

அதன் பட்டதாரிகள் இலங்கையின் பல்லின சமூகங்களின் வேறுபட்ட கலாசாரப் பெறுமானங்களை மதிக்கும் பரந்த மனப்பான்மையையும் மனித நேயத்தையும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளையும் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகின்றனர்.

எனவே இலங்கை திருநாட்டுக்கும் சமூகத்திற்கும் தொடர்ச்சியாக இதுபோன்று பங்களிப்பு செய்யக்கூடிய ஒரு நிறுவனமாக தொடரட்டும் என ‘நியூஸ் நவ்’ வாழ்த்துகின்றது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...