2018 இல் எம்.பிக்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்றமை தொடர்பான குரல் ஒலிப்பதிவுகள்: விசாரணைகள் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் கேள்வி?

Date:

2018 ஆம் ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்றமை தொடர்பான விடயங்களை பல சர்ச்சைக்குரிய குரல் ஒலிப்பதிவுகள் வெளிப்படுத்தியிருந்தன.

அது தொடர்பாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது 2018 நவம்பர் மாதம் 05 ஆம் திகதியன்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது

இதனையடுத்து, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்குவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையினை மையப்படுத்தி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது 2018 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஓர் கடிதத்தினை சமர்ப்பித்திருந்தது.

குறித்த முறைப்பாட்டினை மேற்கொண்டு நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது  முறைப்பாடு தொடர்பிலான ஆணைக்குழுவின் தீர்மானத்தினை குறிப்பிட்டு ஓர் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளது.

அதனடிப்படையில், போதிய தகவல்கள் வெளிப்படவில்லை என்ற காரணத்தினால் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது குறித்த முறைப்பாடு தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...