பயங்கரவாதத் தடைச் சட்ட உத்தரவில் ஜனாதிபதி கையொப்பமிட்டால், அது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்: ஐ.நா.அறிக்கையாளர்

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்டோரை தடுத்து வைக்கும் உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டால், அது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேரி லோலர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதில் மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வௌ சிறிதம்மா ஹிமி ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதையிட்டு நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்.

அவர்களை தடுத்து வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என்று ஜனாதிபதி ரணிலுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன், அவ்வாறு செய்வது ஒரு இருண்ட நாளாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வசந்த முதலிகே மற்றும் மேலும் இருவரின் விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...