பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘ஹரக் கட்டா’வை நாடு கடத்த சிறப்பு சட்ட அமுலாக்க குழு!

Date:

‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக தலைவர் நதுன் சிந்தக விக்கிரமரத்னவை மீட்பதற்காக இலங்கை பொலிஸ் துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட சட்ட அமுலாக்கக் குழுவொன்று டுபாய் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘ஹரக் கட்டா’ கடந்த 10 ஆம் திகதி டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் இன்டர்-போல் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையால் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மேலும் 12 குண்டர் கும்பல்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேடப்படும் குற்றவாளிகள், குறிப்பாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் கொலை சந்தேக நபர்கள், துபாய் மற்றும் இந்தியாவிற்கு குடிபெயர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குற்றவாளிகளின் கூட்டாளிகள் அவர்களுக்கு மறைந்திருக்க இடம் கொடுப்பதால், துபாய் அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளது என்று பொது பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...