அரசு தலையிட்டால் பேக்கரி பொருட்களை குறைக்கலாம்: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

Date:

பேக்கரி உரிமையாளர்களுக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தேவையான ஆதரவை வழங்கினால் ஒரு இறாத்தல் பாணின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம்,  பேக்கரி உற்பத்திக்கு தேவையான முக்கிய பொருட்களான மா, சீனி, மாஜரின், முட்டை ஆகியவற்றின் விலை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் பணின் விலைக்க முடியுமாக இருக்கும்  எனவும்  அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலர் பிரச்சினை காரணமாக சந்தையில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர் நாட்டில் கோதுமை மா மாபியாவும் இயங்கி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், 200 ரூபாவிற்கு கோதுமை மா மாவியாவினால் 280 ரூபாவிற்கு பேக்கரி உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டையின் விலையும் அநியாயமாக அதிகரித்துள்ளதாகவும், அரசாங்கம் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை விதித்த போதிலும் சந்தையில் கட்டுப்பாட்டு விலையில் முட்டை கிடைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்தால், 190 /= அதிக விலை கொண்ட 400 கிராம் பாணின் விலையை,  50/=  குறைக்கலாம்.

எனவே அரசாங்கம் தலையிட்டு இப்பிரச்சினைக்கு ஆதரவளிக்காவிட்டால்  பேக்கரி பொருட்களை வாங்க வேண்டாம் எனவும்  கூறுவார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...