அரசு தலையிட்டால் பேக்கரி பொருட்களை குறைக்கலாம்: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

Date:

பேக்கரி உரிமையாளர்களுக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தேவையான ஆதரவை வழங்கினால் ஒரு இறாத்தல் பாணின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம்,  பேக்கரி உற்பத்திக்கு தேவையான முக்கிய பொருட்களான மா, சீனி, மாஜரின், முட்டை ஆகியவற்றின் விலை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் பணின் விலைக்க முடியுமாக இருக்கும்  எனவும்  அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலர் பிரச்சினை காரணமாக சந்தையில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர் நாட்டில் கோதுமை மா மாபியாவும் இயங்கி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், 200 ரூபாவிற்கு கோதுமை மா மாவியாவினால் 280 ரூபாவிற்கு பேக்கரி உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டையின் விலையும் அநியாயமாக அதிகரித்துள்ளதாகவும், அரசாங்கம் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை விதித்த போதிலும் சந்தையில் கட்டுப்பாட்டு விலையில் முட்டை கிடைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்தால், 190 /= அதிக விலை கொண்ட 400 கிராம் பாணின் விலையை,  50/=  குறைக்கலாம்.

எனவே அரசாங்கம் தலையிட்டு இப்பிரச்சினைக்கு ஆதரவளிக்காவிட்டால்  பேக்கரி பொருட்களை வாங்க வேண்டாம் எனவும்  கூறுவார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

இன்றைய தினமும் வறட்சியான வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை...

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...