பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவருக்கும் சார்பாக 03 அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் நாளை சமர்பிக்க அவர்களது சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்களுக்கு சார்பாக நீதிமன்றத்தின் மூலம் ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்படுவதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.
மேலும் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது நியாயமற்ற செயல் எனவும் சட்டத்தரணி நுவான் போபகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, போராட்டக்காரர்களை கைது செய்வதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.