வசந்த முதலிகே உட்பட மூவர் சார்பாக 3 அடிப்படை உரிமை மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றில்…!

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவருக்கும் சார்பாக 03 அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் நாளை சமர்பிக்க அவர்களது சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்களுக்கு சார்பாக நீதிமன்றத்தின் மூலம் ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்படுவதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.

மேலும் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது நியாயமற்ற செயல் எனவும் சட்டத்தரணி நுவான் போபகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, போராட்டக்காரர்களை கைது செய்வதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...