ஆகஸ்ட் 30இல் இடைக்கால பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

இதன்படி, அன்றைய தினம் பிற்பகல் 1:00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், வரவு செலவுத் திட்ட உரை பிற்பகல் 2:00 மணி வரை நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 1 மற்றும் 2ம்  திகதிகளில் வரவு செலவு மீதான விவாதம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

இதற்கிடையில்,  எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...

இன்று முதல் மின்சார சபையில் மாற்றம்

இலங்கை மின்சார சபையின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் இன்று முதல் 6...

தேசிய நலன் கருதி PSTA-வைக் கைவிடுமாறு ஜனாதிபதியிடம் 14 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தல்!

(தேசிய சூரா சபையின் (NSC) பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம்....