சுதந்திர தினத்தின்போது தாக்குதல் நடத்தினால் சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை..!

Date:

தங்களது சுதந்திர தினத்தின்போது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உக்ரைனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போலந்து ஜனாதிபதி அண்ட்ரேஸ் டூடாவுடன் இணைந்து தலைநகர் கீவில் செய்தியாளர்களை சந்தித்த ஜெலென்ஸ்கி, இதனை தெரிவித்தார்.
சோவியத் யூனியனிலிருந்து பிரிந்ததை சுதந்திர தினமாக உக்ரைன் இன்று கொண்டாடுகிறது.
இதை முன்னிட்டு, ரஷ்யா மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும், இத்தகைய நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டால், சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...