கப்பலில் இருந்து சூப்பர் டீசலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

Date:

இலங்கை வந்துள்ள சூப்பர் டீசல் கப்பலில் இருந்து சூப்பர் டீசலை தரையிறக்கும் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று தரையிறக்கப்பட இருந்த சூப்பர் டீசல் தொகை வங்கி நடவடிக்கைகளின் தாமதம் காரணமாக தரையிறக்கப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

ட்விட்டர் செய்தியில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மற்றொரு டீசல் கப்பல் இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ள நிலையில் நாளை காலை தரையிறக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தாமதமான எரிபொருள் விநியோகத்தை ஈடுகட்ட இரவு நேர விநியோகமும் இடம்பெறும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...