கடன் விவகாரம் குறித்து விவாதிக்க ஏனைய கடன் வழங்கும் நாடுகளும் ஒன்று கூடுவது முக்கியம் : ஜப்பான்!

Date:

கடன் விவகாரம் குறித்து விவாதிக்க இலங்கையின் அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் ஒன்று கூடுவது முக்கியம் என்று ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், டோக்கியோ இந்த விஷயத்தில் மற்ற கடன் வழங்குநர்களுடன் ஒருங்கிணைக்கும் என்றும் கூறினார்.

இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் ராய்ட்டர்ஸிடம், இருதரப்புக் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பிரதான கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானை இலங்கை கேட்கும் என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கு முன்னதாக செவ்வாய்கிழமை, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, அவ்வாறான ஒரு சந்திப்பை நடத்துவதற்கு  எந்த செயற்பாடும் இலங்கையுடன் நடைபெறவில்லை’ என்று ஹயாஷி ஒரு வழக்கமான செய்தி மாநாட்டில் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...