இலங்கை மற்றும் ஓமன் உறவுகள் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது!

Date:

ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட், இலங்கை – ஓமன் உறவுகள் கடந்த, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற தலைப்பில் 164 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நூல் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான உறவுகளை விபரிப்பதுடன் அதன் எதிர்காலக் கண்ணோட்டத்தை முன்னறிவிக்கிறது.

பிளாக் ரூ ஒயிட் மீடியா அண்ட் சர்வீசஸ் எல்.எல்.சியால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம்,  கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி வெளியுறவு அமைச்சகத்தின் இராஜதந்திர நிறுவனத்தில், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இராஜதந்திர விவகாரங்களின் துணைச் செயலர் ஷேக் கலீஃபா அல் ஹார்தியால் வெளியிடப்பட்டது.

இந்தப் புத்தகம் ஓமன் மற்றும் இலங்கையின் நட்புறவின் வலிமைக்கு மட்டுமல்ல, இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத்தின் குணாதிசயத்தின் வலிமைக்கும், வாழ்க்கையின் ஒவ்வொரு முயற்சியையும் அவர் மேற்கொள்ளும் ஆர்வத்துக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு சான்றாகும் என என்று ஓமன் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 17, 2021 அன்று நினைவுகூரப்பட்ட இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...