சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை குழுக்கள் விழிப்புடன்…!

Date:

(File Photo)

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 35 கடற்படை நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக 26 நிவாரணக் குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

காலி, தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் வகையில் 09 நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை தேவைக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பில் நிவாரணக் குழுக்கள் வைக்கப்பட்டு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும்...

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான்...

ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) ...