கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 94 சதவீதம் உயர்ந்துள்ளது!

Date:

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் உணவு வகையின் விலை 93.7 வீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் உணவுப் பிரிவில் ஆண்டு இலட்ச பணவீக்கம் 90.9 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உணவு வகைகளில் புதிய மீன், பழங்கள், ரொட்டி, பிஸ்கட், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

இதேவேளை, ஜூலை மாதத்தில் 46.5 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பிரிவின் வருடாந்த புள்ளி பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 50.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வீடுகள், குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, ஜவுளி மற்றும் பாதணிகள் ஆகியவற்றின் விலையேற்றம் காரணமாகும்.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 64.3 சதவீதமாக அதிகரித்தது. இது கடந்த ஜூலை மாதம் 60.8 சதவீதமாக இருந்தது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...