கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 94 சதவீதம் உயர்ந்துள்ளது!

Date:

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் உணவு வகையின் விலை 93.7 வீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் உணவுப் பிரிவில் ஆண்டு இலட்ச பணவீக்கம் 90.9 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உணவு வகைகளில் புதிய மீன், பழங்கள், ரொட்டி, பிஸ்கட், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

இதேவேளை, ஜூலை மாதத்தில் 46.5 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பிரிவின் வருடாந்த புள்ளி பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 50.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வீடுகள், குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, ஜவுளி மற்றும் பாதணிகள் ஆகியவற்றின் விலையேற்றம் காரணமாகும்.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 64.3 சதவீதமாக அதிகரித்தது. இது கடந்த ஜூலை மாதம் 60.8 சதவீதமாக இருந்தது.

Popular

More like this
Related

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பான இணையவழி உரையாடல் நாளை?

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும்...

நாளை முதல் வானிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் நாளை (12) முதல் மாற்றம்...

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும்...

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...