இந்த வார இறுதிக்குள் 22ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்து!

Date:

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை இந்த வார இறுதிக்குள் பெற்றுக் கொள்ள நம்புவதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (1) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேநேரம் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்ற பிறகு, நாட்டுக்கு ஏற்ற வகையில் வரைவு மசோதா நிறைவேற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று அரச துறையில் மட்டுமன்றி தனியார் துறையிலும் ஊழல் நடைபெறுவதாக தெரிவித்த அமைச்சர், ஊழல் மோசடிகளை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக கடந்த காலங்களில் பதினைந்து சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்   “பண முகாமைத்துவத்தில் எமது நாடு தவறிழைத்துவிட்டது” என்றும்  தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்கும் நிறைவேற்று அதிகாரமும் நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது என்றும், ஹம்பாந்தோட்டை துறைமுக விற்பனையும் அதற்கு பெரும் உத்வேகத்தை வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

டொலரின் ஆதிக்கம் முடியப்போகிறதா? ஹார்முஸ் நீரிணையும் உலக அரசியலும்.

-Dr.Ashker Aroos (Naleemi) ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் அதிகாரத்திற்கு...

எரிபொருள் QR கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாடு

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது...

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்...