இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்: பணம் அனுப்பும் தொகையை அதிகரிப்பதற்கான திட்டம்

Date:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கணிசமான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சுகாதார சேவைத் துறையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கையின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த வைத்தியர் சங்கமாக கருதப்படும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை வைத்தியர்களின் வெளிநாட்டுப் பணத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 1000 ஆக இருக்கும் என டாக்டர் ருவான் ஜயசூரிய கூறுகிறார்.

வைத்தியர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நோக்கில் வைத்தியர்களை வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு சுற்றறிக்கையை வெளியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...