பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற செயற்பாடு: அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் வடிவேல் சுரேஷ் அவசர சந்திப்பு!

Date:

பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற நிர்வாகம் தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அவசர சந்திப்பு இன்றைய தினம் பெருந்தோட்ட  கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

பெருந்தோட்ட பகுதிகளில் JEDB  நிர்வாகத்தினால் பெருந்தோட்ட மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை மீள பெற்றுக்கொள்ள நிர்வாகம் நடவடிக்கை எடுத்தமையினால் குடியிருந்த மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது இவ்விடயம் தொடர்பில் இன்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியமைக்கு அமைய நிலைமையை சீர் செய்ய இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது

மேலும் பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவினால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் அநீதியை பெருந்தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் விஸ்தரித்தால் அல்லது மலசலகூடங்கள் அமைத்தாலோ உடனடியாக வழக்கு தொடரப்படுகின்றது.

இருப்பினும் பெருந்தோட்ட நிறுவனங்களினால் காடுகளாக மாற்றப்படும் காணிகளுக்கு எவ்விதமான எதிர்ப்பும் இல்லை இவ்விடயம் தொடர்பிலும் தொழில் அமைச்சில் கலந்துரையாடப்பட்டது.

இதனையடுத்து  தொடர்ந்தும் இத்தகைய செயற்பாடுகள் நடைபெறாது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் உறுதியளித்தார்

மேலும் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடி செயற்பாடுகள் பெருந்தோட்ட மலையக மக்களின் உரிமைகள் தொழில் பாதுகாப்பு தொடர்பாகவும் வடிவேல் சுரேஷ் அவர்கள் அமைச்சருக்கு ஆணித்தனமாக எடுத்துரைத்தார்.

பெருந்தோட்ட நிர்வாகங்கள் இத்தகைய தன்னிச்சையான செயற்பாடுகளினால்பெருந்தோட்ட மலையக மக்கள் பாதிப்படைவதோடு பெருந்தோட்ட தொழிற் துறையும் பாரியதொரு வீழ்ச்சியை கண்டுள்ளது .

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...