படகுகளை பயன்படுத்தி மனித கடத்தலில் ஈடுபட்ட ஐவர் காத்தான்குடியில் கைது!

Date:

காத்தான்குடி முத்துவாரன் கரையோரப் பகுதியில் படகுகளில் சட்டவிரோத குடியேற்றம் மூலம் மனித கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் களவாஞ்சிக்குடி முகாம் அதிகாரிகள் இணைந்து நேற்று இரவு மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட குழுவொன்றுக்கு ஐந்து சந்தேக நபர்களும் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது நான்கு டிங்கி படகுகள் மற்றும் 70 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்களை காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

28, 31, 33, 37 மற்றும் 44 வயதுடைய சந்தேகநபர்கள் மட்டக்களப்பு மற்றும் நாவலடியைச் சேர்ந்தவர்கள்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...