உச்சத்தை தொட்ட தாமரை கோபுரத்தின் வருமானம்!

Date:

தாமரை கோபுரத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் திறக்கப்படும் என தாமரை கோபுர பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.

மூன்றாம் கட்டத்தையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் திகதி முதல் கட்ட தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டதுடன் கடந்த 04 நாட்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதனை பார்வையிட வந்திருந்தனர்.

இதன் மூலம் 11 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாமரை கோபுரத்தை பார்வையிட நேற்று (19) அதிகளவான மக்கள் வருகை தந்ததாகவும் இதன் காரணமாக இன்று முதல் அதனை பார்வையிட வழங்கப்பட்டுள்ள நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....