ஓய்வு பெறவுள்ள 300 விசேட மருத்துவர்கள்!

Date:

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் பரிந்துரையின்படி அரசத்துறையின் கட்டாய ஓய்வு வயது 60 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டிசம்பர் 31ம் திகதிக்குப் பிறகு சுமார் 300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெற உள்ளதாக விசேட மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள் ஓய்வு பெறும் நாளாக அது இருக்கும் என அவர்கள் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது சுகாதாரத் துறையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 43 விசேட வைத்திய நிபுணர்களும், கண்டி தேசிய வைத்தியசாலையின் 30 விசேட வைத்திய நிபுணர்களும், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் 17 விசேட வைத்திய நிபுணர்களும், சிறுவர் வைத்தியசாலையின் 15 விசேட வைத்திய நிபுணர்களும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் 9 விசேட வைத்திய நிபுணர்களும் ஓய்வுபெறவுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...