சவூதி வெளியுறவு அமைச்சருடன் அலி சப்ரி சந்திப்பு!

Date:

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத்தை சந்தித்துள்ளார்.

இலங்கையில் எதிர்கால சவூதி முதலீடு மற்றும் சிறந்த இருதரப்பு பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினார்.

மேலும் இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கான கூடுதல் வேலை வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டுளளது.

இதேவேளை அலிசப்ரி உஸ்பெகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் நோரோவை சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களையும், மத்திய மற்றும் தெற்காசியாவிற்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துவது உட்பட பலதரப்பு மன்றங்களில் மேலும் ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டில் இன்று மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்...

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒருமித்துச் செயற்பட வேண்டும்!

-என்.எம்.எம்.மிஃப்லி முன்னாள் இறைவரி திணைக்கள ஆணையாளர்.       முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலம்: ஆண் பெண்...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்...