உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இன்று இணைப்பு!

Date:

உக்ரைனில் தன் இராணுவத்தின் ஆதரவுடன், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பிராந்தியங்களை முறைப்படி தன் நாட்டுடன் இணைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பெப்ரவரி 25இல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது.

ரஷ்யப் படைகளுக்கு எதிராக, உக்ரைன் இராணுவம் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களான டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியாவை தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டது.

இதற்காக, இந்தப் பிராந்தியங்களில் மக்களின் கருத்துகளை கேட்கும் ஓட்டெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தப் பிராந்தியங்கள் இன்று ரஷ்யாவுடன் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி கெஸ்கோவ் நேற்று மாஸ்கோவில் கூறியதாவது,

மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், இந்தப் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்க மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

ஜபோரிஸ்சியாவில் 93 சதவீதம் பேரும், கெர்சானில் 87 சதவீதம் பேரும், லுஹான்க்சில் 98 சதவீதம் பேரும், டோனெட்ஸ்க்கில் 99 சதவீதம் பேரும் ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து, மாஸ்கோவில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில், இந்தப் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவிப்பார்.

அப்போது, இந்தப் பிராந்தியங்களின் நிர்வாகத்தினர் முறைப்படி ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ஓட்டெடுப்பை புறக்கணிப்பதாகவும், ரஷ்யாவின் இணைப்பு முயற்சியை அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் இந்த நாடுகள் கூறியுள்ளன.

புடின் கடந்த வாரம் ஒரு உரையில் இணைப்புத் திட்டங்களை பகிரங்கமாக ஆதரித்தார், அதில் அவர் நூறாயிரக்கணக்கான ரஷ்ய இருப்புக்களை அழைப்பதாகவும் அறிவித்தார், மேலும் தேவைப்பட்டால் ரஷ்ய பிரதேசத்தை பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று எச்சரித்தார்.

புடினின் இராணுவ அழைப்பில் இருந்து தப்பிக்க பல்லாயிரக்கணக்கான ரஷ்ய ஆண்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றிய சுற்றுலா விசாக்களுடன் ரஷ்யர்களை தரைவழியாக நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, ஐரோப்பாவிற்கு மீதமுள்ள சில வழிகளில் ஒன்றை பின்லாந்து மூடியது.

ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவையின் தலைவர், புட்டினின் 70வது பிறந்தநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, அக்டோபர் 4 ஆம்  திகதி நான்கு பிராந்தியங்களை இணைப்பது குறித்து அறை பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதேவேளை ரஷ்யாவில் முறைப்படி இணைக்கப்பட்டவுடன் நான்கு பிராந்தியங்களும் மாஸ்கோவின் அணுசக்தி குடையின் கீழ் வரும் என்று ரஷ்ய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...