அமெரிக்காவினால் வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் இன்று நாட்டுக்கு!

Date:

பல அமெரிக்க மனிதாபிமான அமைப்புகளினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்து மற்றும் மருத்துவ உதவிகள் இன்று நாட்டை வந்தடைகின்றன.

வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டின் மூலம், இலங்கை அதே மருந்துப் பொருட்களையும் மருத்துவ உதவிகளையும் இலவசமாகப் பெறுகின்றது.

அந்த மனிதாபிமான அமைப்புகளால் ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு 04 மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த 04 மருந்துப் கையிருப்புகளின் மொத்தப் பெறுமதி சுமார் 4.6 பில்லியன் ரூபா என வொஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவிகளைப் பெறுவதற்கு மனிதாபிமான அமைப்புகள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...