அமெரிக்காவினால் வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் இன்று நாட்டுக்கு!

Date:

பல அமெரிக்க மனிதாபிமான அமைப்புகளினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்து மற்றும் மருத்துவ உதவிகள் இன்று நாட்டை வந்தடைகின்றன.

வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டின் மூலம், இலங்கை அதே மருந்துப் பொருட்களையும் மருத்துவ உதவிகளையும் இலவசமாகப் பெறுகின்றது.

அந்த மனிதாபிமான அமைப்புகளால் ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு 04 மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த 04 மருந்துப் கையிருப்புகளின் மொத்தப் பெறுமதி சுமார் 4.6 பில்லியன் ரூபா என வொஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவிகளைப் பெறுவதற்கு மனிதாபிமான அமைப்புகள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...